புதுக் கடவுள்கள் தேவையா?
கடவுள் என்றால் என்ன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். கடவுள் என்பவர் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவர் என்பதை அனைவரும் ஏற்பர். அவ்வாறு இருக்கையில், கடவுள் எவ்வாறு புதிதாக உருவெடுக்க முடியும்? புதுக் கடவுள் என்பதற்கு ஏதேனும் பொருள் உண்டோ? நிச்சயம் இல்லை. கடவுள் யார் என்பதை சாஸ்திரங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதையும், சிவன், பிரம்மா முதலிய பல்வேறு இதர தேவர்கள் இவ்வுலகில் முழுமுதற் கடவுளின் பிரதிநிதியாகச் செயல்படுகின்றனர் என்பதையும் பகவத் கீதையைப் படித்தால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணரை திருப்தி செய்வதே பக்குவத்தின் பொருள்
பகவான் விஷ்ணுவின் கருணையைப் பெறுவதே வாழ்வின் ஒரே குறிக்கோள். ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம், “பகவான் விஷ்ணுவின் வாசஸ்தலமே உன்னத இலக்கு,” என்று ரிக் வேதம் கூறுகின்றது. ஆனால் மக்களோ வாழ்வின் குறிக்கோள் என்னவென்பதை அறிவதில்லை. வாழ்வின் நோக்கத்தை அறியாத சமுதாயம் அறியாமையில் உள்ளது. பெளதிகமான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ முயல்கின்றனர். சமூகம், அரசியல், பொருளாதாரம், அல்லது மத ரீதியிலான விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மகிழ்விக்க தலைவர்கள் முயல்கின்றனர். ஆனால், துராஷயா யே பஹிர்-அர்த-மானின:, அவர்கள் முழுமுதற் கடவுளின் பௌதிக சக்தியிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முயல்வதால், அவர்களது நம்பிக்கை ஒருபோதும் நிறைவேறாது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
தூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்
பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும். ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.
ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றும்கூட அறிஞர்களிடையே இதுகுறித்து அபிப்பிராய பேதம் காணப்படுகிறது.
சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்
கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் [...]
செல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்
மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட முடியுடன் காணப்படுவார், சான்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராகவும், மாணவர் சங்க தலைவராகவும், மாபெரும் செல்வந்த பெற்றோர்களின் மகனாகவும் இருந்தார். அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் கோயிலில் ஸங்கீர்த்தனத்தில் பங்குகொண்டபோது, பிரபுபாதரின் செயலாளர் அவரை மாடியில் இருந்த பிரபுபாதரின் அறைக்கு அழைத்துச் சென்றார். ராண்டி மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஆயினும், பிரபுபாதரின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே தான் மட்டுமே விருந்தாளியாக இருப்பதைக் கண்டார்.
ரோபோக்களுக்கு உணர்ச்சி சாத்தியமா?
ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், அவ்வாறு சிந்தித்து செயல்படுவதற்கான திறனும் உணர்ச்சிகளும் ஆத்மாவிடமிருந்து வருகின்றன, ஜடப் பொருட்களின் கலவையான ரோபோவினால் அவை இயலாதவை. உணர்ச்சி என்பது உயிரிலிருந்து மட்டுமே வரக்கூடும். உணர்வுகளை இயந்திரத்தின் மூலமாகப் பெறுவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும், நாம் பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் அந்த இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.
திருத்தலங்களின் நன்மைகள்
எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. இந்த தீர்த்த ஸ்தலங்கள் வைகுண்ட லோகங்களிலிருந்து வேறுபாடற்றவையாக உள்ளதால் அளவிட இயலாத தெய்வீக சக்திகளால் நிறைந்துள்ளன. பகவான் கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தீர்த்த ஸ்தலங்களில் அவரை அணுகுதல் மிகவும் எளிது. தீர்த்த ஸ்தலங்களில் ஒருவர் செய்யும் பக்தி சேவை பல மடங்கு பலனைத் தரும் என்பது சாஸ்திரங்களின் கூற்று. எனவே, ஆன்மீக வாழ்வில் துரிதமாக முன்னேற விரும்புவோரின் அடைக்கலமாக தீர்த்த ஸ்தலங்கள் திகழ்கின்றன.
பக்தி யோக வாழ்க்கை
நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு துன்பத்திற்கான மூல காரணமாகும். ஜட உலகின் தொடர்பினால் ஜட இயற்கையின் முக்குணங்களான ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்திற்கு ஜீவன் உட்படுகிறான். ஆனால், உண்மையில் பரம புருஷரைப் போன்று ஜீவன்களும் ஆனந்தமயமானவர்களே. ஜீவன்கள் தற்போதைய கட்டுண்ட நிலையில் தங்களது ஸ்வரூபத்தினை (நான் பரம புருஷ பகவானின் சேவகன் என்பதை) மறந்துள்ளனர். பக்தித் தொண்டின் மூலமாக அந்த ஸ்வரூப நிலையினை மீண்டும் அடையலாம்.
கிருஷ்ணரை அடைய பக்தியே வழி
இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். நாம் ஏன் இந்த பௌதிக உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. வேத இலக்கியங்களின் வழிகாட்டுதல்கள் ஜோதிடரின் அறிவுரையைப் போன்றவை, அவற்றைக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான வழியைத் தேட வேண்டும். ஜோதிடர் எவ்வாறு ஏழைக்கு குறிப்புகளைத் தருகிறாரோ, அவ்வாறே வேத நூல்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன. அதன் மூலமாக நமது தந்தையுடனான இழந்த உறவைப் புதுப்பித்து நாம் பெரும் செல்வந்தர்களாக முடியும்.
உங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்
இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார். மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால், அவருடைய உடல் ஆன்மீகமானது என்று நீங்கள் கூறினீர். இருப்பினும், அவர் பூமியில் [...]
மன்னர் பிரியவிரதரின் செயல்கள்
பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.
கிழவனும் குமரியும்
ஸ்ரீல பிரபுபாதர் எடுத்துரைத்த உபதேச கதை [...]
பாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்?
பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்த இந்தக் கருத்து புரட்சி இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவுகள் அங்கங்கே இருப்பதை அனைவரும் அறிவர். இதனை ஊரறியத் தெரிவிப்பது குற்றத்தைக் குறைக்குமா, வேறு தீர்வுகள் உண்டா, சற்று ஆராய்வோம்.
ஆன்மீக கலாச்சாரத்தை மறவாதீர்
இன்று பண்பாட்டையும் வணிகத்தையும் பற்றிப் பேச இருக்கிறேன். வணிகம் என்பது ஒரு தொழிற்கடமை. நமது வேதப் பண்பாட்டில் பலவிதமான தொழிற்கடமைகள் உள்ளன. பகவத் கீதை (4.13) கூறுகிறது, சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண–கர்ம–விபாகஷ:, மக்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நால்வகைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன—பிராமணர் (புத்திசாலிகள் மற்றும் ஆசிரியர்கள்), சத்திரியர் (இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள்), வைசியர் (விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்), மற்றும் சூத்திரர் (தொழிலாளிகள்). இவ்வாறாக, பல்வேறு திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்கள் உள்ளன.
Dinakaran A R says:
Sreenivasan says:
Sri Radhika nandana says: