சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.
[et_pb_section fb_built=”1″ admin_label=”Section” _builder_version=”3.22″ collapsed=”off” global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”3.25″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” collapsed=”off” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.25″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||”][et_pb_text _builder_version=”3.27.4″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}” inline_fonts=”Nityananda”]

இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால்,

இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது.அத்வைதரின் தோற்றம் அத்வைத ஆச்சாரியர் 1434ஆம் ஆண்டில், தற்போதைய வங்கதேசத்தின் சில்லட் நகரத்திற்கு அருகிலுள்ள நவகிராமத்தில், ஸ்ரீ குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாபதேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அத்வைத ஆச்சாரியரின் பிறப்பிடத்தில் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது, அது தற்போது இஸ்கான் இயக்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது,

குறுகிய காலத்தில் அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கரையோரத்தில் இருக்கும் சாந்திபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். நவத்வீபத்தில் இருக்கும் ஸ்ரீவாஸ தாகூரின் இல்லத்திற்கு அருகில் மற்றோர் இல்லத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டபோதிலும், அத்வைத ஆச்சாரியர் பெரும்பாலும் சாந்திபுரத்திலேயே வசித்தார். அவர் இவ்வுலகில் 125 ஆண்டுகளுக்கு தனது திவ்ய லீலைகளை அரங்கேற்றினார்.

சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 52 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அத்வைத ஆச்சாரியர் தனது எஜமானரான சைதன்ய மஹாபிரபுவின் மறைவிற்குப் பிறகும் 25 ஆண்டுகள் திவ்ய லீலைகளில் ஈடுபட்டிருந்தார்.

அத்வைத ஆச்சாரியரின் வம்சம்

அத்வைத ஆச்சாரியருக்கு இரண்டு துணைவிகள்: சீதா தாகூராணி மற்றும் ஸ்ரீதேவி. சீதா தாகூராணிக்கு அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர், பலராமர், ஸ்வரூபர், ஜகதீஷ மிஸ்ரர் என ஆறு மகன்கள் பிறந்தனர்; ஸ்ரீதேவிக்கு சியாம தாஸர் என்ற ஒரு மகன் பிறந்தார். இவர்களில் அச்சுதானந்தர், கிருஷ்ண தாஸர், கோபாலர் ஆகிய மூவரும் சைதன்ய மஹாபிரபுவின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்கள்.

மாதவேந்திர புரியிடம் தீக்ஷை பெறுதல்

கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மாதவேந்திர புரியே கிருஷ்ண பிரேமையின் பொக்கிஷக் கிடங்காக கருதப்படுகிறார். கிருஷ்ண பக்தி என்னும் மரத்திற்கு அவரே மூல விதையாகத் திகழ்பவர். மாதவேந்திர புரி விருந்தாவனத்தில் இருக்கும் கோவர்தன மலையின் அடிவாரத்தில் வசித்தபோது, அவரால் அங்கு வழிபடப்பட்ட கோபால விக்ரஹம் அவரது கனவில் தோன்றி தனது திருமேனியில் சந்தனத்தை பூசுமாறு உத்தரவிட்டார். அதனை நிறைவேற்றும் பொருட்டு அவர் ஜகந்நாத புரியை நோக்கி பயணமானார்.

அப்பயணத்தின்போது, மாதவேந்திர புரி சில நாள்கள் சாந்திபுரத்தில் தங்க நேர்ந்தது. அத்வைத ஆச்சாரியரும் மாதவேந்திர புரியும் கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை பற்றி விவாதித்தனர். மாதவேந்திர புரியிடம் காணப்பட்ட பக்தி பரவசத்தைக் கண்ட அத்வைத ஆச்சாரியர் அவரின் காலில் விழுந்து வணங்கி, அவரை தனது குருவாக ஏற்று, அவரிடமிருந்து தீக்ஷையும் பெற்றுக் கொண்டார். அத்வைத ஆச்சாரியர் பரம புருஷ பகவானின் விரிவங்கமாக இருந்தபோதிலும், உலக மக்களுக்கு ஆன்மீக குருவை ஏற்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, சீடர் என்னும் திவ்ய லீலையை அரங்கேற்றினார்.

 அத்வைத ஆச்சாரியரால் வழிபடப்பட்ட சாலக்ராம சீலா.

 அத்வைத ஆச்சாரியர் இவ்வுலகில் தோன்றியபோது, பண்டிதர்கள் செருக்குடனும் ஞானிகள் பெருமையுடனும் பொதுமக்கள் பௌதிக இலாபங்களுக்காகவும் கிருஷ்ணரைத் தவிர்த்து தேவர்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர். விஷ்ணு பக்தி இல்லாமல் பௌதிக மக்கள் துன்புறுவதைக் கண்ட அத்வைத ஆச்சாரியருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டது. கலி யுக மக்களின் அவல நிலையைக் கண்ட அத்வைத ஆச்சாரியர் அதனை உடனடியாக போக்குவதற்காக, பரம புருஷ பகவானை இவ்வுலகில் அவதரிக்கச் செய்வதற்கான மும்முரமான ஏற்பாட்டில் இறங்கினார்.

அத்வைத ஆச்சாரியர் அனைத்து மங்களகரமான குணங்களுக்கும் இருப்பிடமாவார். தாமரைப் போன்ற கண்களைக் கொண்டிருந்ததால், அத்வைத ஆச்சாரியருக்கு கமலகாந்தர் என மற்றொரு திருநாமமும் இருந்தது. அத்வைத ஆச்சாரியர் பக்தி, ஞானம், துறவு என அனைத்திலும் முதன்மையாகத் திகழ்ந்ததால், அவரை வேதபஞ்சனானர் என்றும் அழைத்தனர். அத்வைத ஆச்சாரியரின் அனைத்து செயல்களும் உலகின் நன்மைக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் அவரை வைஷ்ணவர்கள் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டனர். (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை, 6.30)

அத்வைத ஆச்சாரியர் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசிக்கும்போது, கிருஷ்ண பக்தியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதே சாஸ்திரத்தின் முடிவுரை என அடிக்கடி வலியுறுத்துவார். அத்வைத ஆச்சாரியர் கலி யுகத்தில் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களைக் கரை சேர்ப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் சைதன்ய மஹாபிரபுவை இவ்வுலகிற்கு வரவழைக்க வேண்டும் என ஆழமாக விருப்பம் கொண்டிருந்தார்.

அத்வைதரின் அழைப்பு

சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று பரம புருஷ பகவான் இவ்வுலகில் தோன்றுவதில்லை. அத்வைத ஆச்சாரியர் அழைத்ததன் பெயரிலேயே தான் இவ்வுலகில் தோன்றியதாக சைதன்ய மஹாபிரபு பலமுறை பக்தர்களிடம் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண பக்தி என்னும் உயர்ந்த பிரேமையை கலி யுக மக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு சைதன்ய மஹாபிரபுவே பொருத்தமானவர் என உறுதி கொண்டிருந்த அத்வைத ஆச்சாரியர் கடும் விரதத்தை மேற்கொண்டார்.

அதன் காரணமாக அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கரையோரத்தில் இருக்கும் பாப்லா என்னுமிடத்தில் கல் வடிவில் இருக்கும் சாலக்ராம விக்ரஹத்தை துளசியாலும் கங்கை நீராலும் வழிபட்டார். கிருஷ்ணரின் தாமரை திருப்பாதத்தை தியானித்து, கிருஷ்ணரின் திருநாமத்தை அத்வைத ஆச்சாரியர் கண்ணீருடன் உரக்க கர்ஜித்தபோது, அது விண்ணுலகைப் பிளந்து சென்று வைகுண்டம் வரை கேட்டது.

அத்வைத ஆச்சாரியரின் தொடர் வற்புறுத்தலால், சைதன்ய மஹாபிரபு சச்சிதேவியின் கருவிற்குள் புகுந்து தனது தெய்வீகத் தோற்றத்தை இவ்வுலகில் வெளிப்படுத்தினார். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகப் பிறப்பை அறிந்த அத்வைத ஆச்சாரியரும் ஹரிதாஸ தாகூரும் சாந்திபுரத்தில் மிகுந்த பரவசமும் உற்சாகமும் ஆனந்தமும் அடைந்தனர். இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபுவின் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாகத் திகழ்பவர் அத்வைத ஆச்சாரியர்.

கங்கை நீரையையும் துளசியையும் கொண்டு அத்வைதர் பகவானை வழிபடுதல்

கிருஷ்ணர் சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும், மஹாவிஷ்ணு அத்வைத ஆச்சாரியராகவும், ஸ்ரீமதி ராதாராணி கதாதர பண்டிதராகவும், நாரதர் ஸ்ரீவாஸ தாகூராகவும் கலி யுகத்தில் தோன்றினர். மஹாவிஷ்ணுவும் சதாசிவமும் இணைந்த உருவமே அத்வைத ஆச்சாரியர்.

அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் பக்தர்கள் கிருஷ்ண கதையை கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். கிருஷ்ணரை வழிபட வைப்பதிலும் புனித நாமத்தை உச்சரிக்க வைப்பதிலும் அவர் ஆன்மீக குருவாக (ஆச்சாரியராக) செயல்பட்டார். மேலும், அவர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், அத்வைதர் என்று அறியப்பட்டார்.

அத்வைத ஆச்சாரியர் தனது பெற்றோர்களின் மறைவிற்குப் பிறகு, கயாவிற்குச் சென்று பிண்ட சடங்குகளை நிறைவேற்றி, பாரத தேசத்தின் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விருந்தாவனத்திற்கு வருகை புரிந்த அவர், கிருஷ்ணரின் வழிபாட்டில் முழுமையாக மூழ்கி, பின்னர் மதனமோஹன விக்ரஹத்தைக் கண்டெடுத்து, மதுராவில் இருந்த சௌபே என்ற பிராமணரிடம் ஒப்படைத்தார். பின்னர், தெய்வீக ஏற்பாட்டின்படி அந்த விக்ரஹம் ஸநாதன கோஸ்வாமியின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டார். இந்த விக்ரஹமே கௌடீய வைஷ்ணவர்களால் இன்றும் விருந்தாவனத்தில் ஸம்பந்த விக்ரஹமாக வழிபடப்படுகிறார்.மாதவேந்திர புரியின் மற்றொரு சீடரான ஈஸ்வர புரியை சைதன்ய மஹாபிரபு தனது குருவாக ஏற்றுக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் பூண்ட பிறகு, இரண்டாவது முறையாக சாந்திபுரத்திற்கு கோவிந்த துவாதசி தினத்தன்று வருகை புரிந்தார். அச்சமயத்தில் அத்வைத ஆச்சாரியர் தனது குருவான மாதவேந்திர புரியின் மறைவு தினத்தைக் கொண்டாடும் வகையில் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஏற்பாட்டைக் கண்டு அகமகிழ்ந்த சைதன்ய மஹாபிரபு, இந்த திதியில் யாரொருவர் இவ்விடத்திற்கு வருகை தந்து பிரசாதத்தை உண்கிறார்களோ, அவர்களுக்கு தூய கிருஷ்ண பக்தி கிட்டும் என வரமளித்தார். சாந்திபுர கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோயிலில், இன்றும் இஸ்கான் இயக்கம் வருடந்தோறும் சாந்திபுரத்தின் இப்பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. மாதவேந்திர புரியின் மறைவு தினத்தை நினைவுகொள்ளும் வகையில் நிகழும் இப்பண்டிகை உலகப் புகழ் வாய்ந்ததாகும்.

மாதவேந்திர புரியின் மறைவு தின திதி பொதுவாக சைதன்ய மஹாபிரபுவின் அவதார தினமான கௌர பூர்ணிமாவிற்கு சற்று முன்பாக வருவதால், பல்வேறு நாடுகளிலிருந்து மாயாபுர் தாமத்திற்கு வருகை புரிந்துள்ள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் இத்திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். உணவு தயாரிப்பதிலும் விநியோகம் செய்வதிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 50,000 மக்கள் இத்திருவிழாவில் பங்கெடுத்து ஆன்மீகப் பலனை அடைகின்றனர். மாதவேந்திரபுரியின் மறைவு தின திதியில் இப்பிரசாதத்தை உட்கொள்வதற்கு தேவர்களும் மானிட உடலை எடுத்து இங்கு வருகின்றனர் என்பது ஐதீகம். கடல்போன்ற பக்தர்களின் கூட்டத்தில் கிருஷ்ண பிரசாதத்தை ஏற்பது பரவசமான நிகழ்ச்சியாகும். நூற்றுக்கணக்கான மாமரங்களை கொண்ட மாந்தோப்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் அன்றைய தினத்தில் வைகுண்டமாக கண்களுக்கு காட்சியளிக்கும் என்றால் அது மிகையாகாது.

சாந்திபுர திருவிழாவில் கூடும் மக்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் வருகை ஸ்ரீல பிரபுபாதர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை தொடங்குவதற்கு முன்பாக பலமுறை சாந்திபுரத்திற்கு வருகை புரிந்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பிரச்சாரம் செய்வதற்கு தனக்கு சக்தியளிக்க வேண்டும் என ஸ்ரீல பிரபுபாதர் இங்கு ஆழமான பிரார்த்தனைகளில் பலமுறை ஈடுபட்டுள்ளார்.

1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் காவி உடையில் இக்கோயிலுக்கு வருகை புரிந்த ஸ்ரீல பிரபுபாதர் பல மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து, அத்வைத ஆச்சாரியரின் முழுமையான ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்ற பிறகே அமெரிக்க பயணத்தைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளைப் பரப்ப வேண்டும் என்னும் சாத்தியமில்லாத முயற்சியானது அத்வைத ஆச்சாரியரின் கருணையால் சாத்தியமானது. ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்காவில் இஸ்கான் இயக்கத்தை 1966இல் தொடங்கி சில வருடங்களிலேயே அவரின் மேற்கத்திய சீடர்கள் சாந்திபுரத்திற்கு வருகை புரிந்து, சாந்திபுர் கோயிலின் பூஜாரிகளுக்கு ஆங்கில பகவத் தரிசன பத்திரிகையை விநியோகம் செய்தது அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அனைவருக்கும் பரிமாறப்படும் கிருஷ்ண பிரசாதம்

சாந்திபுரத்தின் முக்கிய நிகழ்வுகளில் சிலசைதன்ய மஹாபிரபுவின் குருவான ஈஸ்வர புரி அத்வைத ஆச்சாரியரின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

சிரார்த்த சடங்கு முழுமை பெறுவதற்கு பொதுவாக பிராமணர்களை அழைப்பது வழக்கம். ஆயினும், பகவானின் நாமத்தை உச்சரிப்பவர் எல்லா பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, அத்வைத ஆச்சாரியர் முதல் பிரசாதத்தை உட்கொள்வதற்கு நாமாசாரியரான ஸ்ரீல ஹரிதாஸ தாகூரை இங்கு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சைதன்ய மஹாபிரபு கட்வாவில் சந்நியாசம் பூண்ட பிறகு முதன்முதலில் சாந்திபுரத்திற்குதான் வருகை புரிந்தார். அப்போது அத்வைத ஆச்சாரியரின் இல்லத்தில் சைதன்ய மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் உணவருந்தியபோது அத்வைத ஆச்சாரியர் பரவச நிலையை எய்தினார்.

முருகன் என்று அழைக்கப்படுகின்ற கார்த்திகேயன் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் பங்கெடுப்பதற்காக, அத்வைத ஆச்சாரியரின் மகனாக அச்சுதானந்தர் என்ற பெயரில் தோன்றினார் (கௌர கணோத்தேஷ தீபிகா 87.8).

மாபெரும் தொட்டிகளில் தயாரிக்கப்படும் பிரசாதம்

சாந்திபுரத்தின் கருணைகலி யுக மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் கருணையைப் பெறுவதற்கு சாந்திபுர் திருத்தலம் மிகச்சிறந்த முன்னோடியாக போற்றப்படுகிறது. அத்வைத ஆச்சாரியரின் திவ்யமான லீலைகளை பௌதிக புத்தியினால் அறிந்துகொள்ள முடியாது.

சைதன்ய மஹாபிரபுவை இவ்வுலகிற்கு வரவழைத்ததும் அனுப்பி வைத்ததும் அத்வைத ஆச்சாரியரே. சாந்திபுரத்தின் மகிமையும் அத்வைத ஆச்சாரியரின் திவ்ய லீலைகளும் மிகவும் விரிவான முறையில் சைதன்ய சரிதாம்ருதம், சைதன்ய பாகவதம் மற்றும் பக்தி ரத்னாகரத்தில் கூறப்பட்டுள்ளது.

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives