AUTHOR NAME

Bhakti Vikasa Swami

17 POSTS
0 COMMENTS
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

கரௌலி

கிழக்கு ராஜஸ்தானின் கரடு முரடான குன்று பிரதேசத்தில் உள்ள கரௌலி என்னும் சிறிய நகரம்தான் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான ஸநாதன கோஸ்வாமியால் வழிபடப்பட்ட பகவான் கிருஷ்ணரின் விக்ரஹமான ஸ்ரீ மதன-மோஹனரின் வசிப்பிடமாகும். கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்த பெரும்பாலான இடங்கள் காலப்போக்கில் மறைந்து போயிருந்த காரணத்தினால், அவற்றைக் கண்டுபிடிக்கும் பொருட்டு பகவான் சைதன்யர் ஸநாதனரை விருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தார். ஸநாதனர் பகவான் மதன-மோஹனரின் விக்ரஹத்தைக் கண்டுபிடித்து விருந்தாவனத்தில் வழிபட்டு வந்தார்.

தூய பக்தி

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

தூய பக்தி

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இச்சொல் பரிச்சயமானதே. ஸ்ரீல பிரபுபாதராலும் இதர சிலராலும் இச்சொல் தற்போது மேற்கத்திய உலகிலும் பிரபலமடைந்து வருகிறது.

ஜபம் செய்வது எப்படி?

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின் மீதான பேரன்பு வளரும்." (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.83) ஒவ்வோர் உண்மையான கிருஷ்ண பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல் அவசியம். நாம் பல பணிகளில் மும்முரமாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்

கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த சந்நியாசிகளில் ஒருவரான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள், தமிழக முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து இராமானுஜரையும் வைஷ்ணவ சித்தாந்தத்தையும் பரப்பும் இந்த நாடகத்திற்காக நன்றி தெரிவித்தார். வைஷ்ணவ தர்மத்தின் உலகளாவிய சகோதரத்துவம், இராமானுஜரின் பெருமைகளை உலகெங்கிலும் எடுத்துரைப்பதில் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் இஸ்கானின் முக்கிய பங்கு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

Latest