தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு
செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த
சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு
ஆசிரியருமாவார்.
ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும் இருப்பவர்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினைச் சோதித்துப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், நிச்சயமாக வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவீர்கள். முன்வாருங்கள், உங்களுடைய வாழ்வை கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதைப் பற்றி வினவுங்கள்.
பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக
காமத்திலே ஈடுபாடு வளரவளர, ஒருவன் தனது நற்குணங்களையெல்லாம் இழக்கிறான். காமத்திலிருந்தே மற்ற அனைத்து கெட்ட குணங்களும் (பேராசை, சுயநலம், வெறுப்புணர்வு மற்றும் கொடூரத்தனம்) வளர்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதுண்டு: “பௌதிக உலக வாழ்க்கைக்கு அடிப்படை பாலுறவு வாழ்வே. அசுரர்களுக்கு காமத்தினால் வரும் உடலின்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. காமம் அனுபவிக்கும் விருப்பங்களிலிருந்து ஒருவன் எவ்வளவு விடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அவன் தேவர்களின் நிலைக்கு உயருகிறான். காம விருப்பங்களில் ஒருவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அசுரர்களின் வாழ்விற்கு அவன் தாழ்ந்து போகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.20.23)
மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில் உபவாசமிருந்து, மனதைக் கட்டுபடுத்தி இந்த இலக்கியங்களை ஆராய்ந்தறிபவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (12.12.61) கூறுகிறது.
புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.