AUTHOR NAME

Jivana Gaurahari Dasa

39 POSTS
0 COMMENTS
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்

பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின் பந்தத்திலிருந்து எளிதில் விடுபட இயலும். கிருஷ்ணர் தெய்வீக ரஸங்களை அனுபவிப்பதற்காக தம்மை எண்ணற்ற ரூபங்களில் விரிவுபடுத்திக் கொண்டு பல்வேறு லீலைகளைப் புரிகின்றார். அந்த லீலைகள் அனைத்தும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை பிறவித் துயரிலிருந்து விடுவிப்பவை. அசுரர்களைக் கொல்லும் லீலையாக இருந்தாலும், பக்தர்களுடனான அன்புப் பரிமாற்ற லீலையாக இருந்தாலும், அவர் வழங்கும் உபதேசமாக இருந்தாலும், அவரது திருமண லீலையாக இருந்தாலும், அவை அனைத்தும் நம்மை மேம்படுத்தக்கூடியவை.

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது?

மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய மக்கள், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினைப் பரப்பியவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமுமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றுவர் என்றும் அன்றே கணித்தார். இறுதியாக, பேராசிரியர் கோதோஸ்கியுடன் சில மணி நேரங்கள் உரையாடிய ஸ்ரீல பிரபுபாதர் கம்யூனிச கொள்கையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு தமது குறுகிய ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் ரஷ்யாவிற்குச் செல்லவில்லை.

உறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா?

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம் இரட்டிப்பாகும் என்றும், துன்பம் பாதியாகக் குறையும் என்றும் மக்கள் கூறுவது வழக்கம். எனவே, மனித சமுதாயத்தில் கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, நண்பன், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிவோர் என உறவுமுறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உறவுகளை அடிப்படையாகக் கொண்டே குடும்பமும் சமுதாயமும் இயங்குகின்றன. பலர் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் ஒருவர் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எந்தவொரு தியாகத்தையும் ஏற்கின்றார். இவற்றிலிருந்து உறவுகளில் கிடைக்கும் அன்பு, பாசம், நேசத்திற்கு மனிதன் இயற்கையாகக் கட்டுப்படுகிறான் என்பதை அறிய முடிகிறது.

மண்ணை உண்ட மாயக் கண்ணனின் கோகுலம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில், வஸுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றினார். சிறையிலிருந்த வஸுதேவரின் சங்கிலிகள் அறுந்தன, சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன, சிறை காவலர்கள் ஆழ்ந்து உறங்கினர். வஸுதேவர் குழந்தை கிருஷ்ணரை எடுத்துக் கொண்டு நந்த மஹாராஜர் வாழ்ந்த கோகுலத்தை நோக்கி முன்னேறினார், ஆர்ப்பரித்து சீறிய யமுனையும் வஸுதேவருக்கு வழி விட்டது.

இராமேஸ்வரம்

தென் தமிழக சேதுபந்த கடற்கரையில் அமைந்திருப்பதே புகழ்பெற்ற இராமேஸ்வரம் என்னும் திருத்தலமாகும். பாம்பன் தீவில் உள்ள சேதுக் கரையில் இராமசந்திர பகவான் பல அற்புத லீலைகளைப் புரிந்து அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளதால், இராமேஸ்வரம் சரணாகதிக்கும் பெயர் பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. பல புனித தீர்த்தங்களை உள்ளடக்கிய இராமேஸ்வரத்திற்கு பலராமர், சைதன்ய மஹாபிரபு என பலரும் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Latest