AUTHOR NAME

Santhana Krishna Dasa

17 POSTS
0 COMMENTS

அருளிச் செயலும் அருளாளனும்

திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும்.

இராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?

பொறியியல் பட்டம் பெற்றவர்களால் கட்டப்படும் பாலத்தின் நிலை என்ன? இன்றைய வல்லுநர்களால் கட்டப்படும் கட்டிடங்களும் பாலங்களும் குறுகிய காலத்திலேயே சிதிலம் அடைகின்றன என்பதை அன்றாடம் காண்கிறோம். அதே சமயம் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட அணைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும், அகழிகளும் பல தலைமுறைகளைக் கடந்து அவர்களது கட்டிடக் கலையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் நிற்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இயந்திர சாதனங்கள் ஏதுமில்லாத அக்காலத்தில் இவற்றை எவ்வாறு கட்டியிருக்கக்கூடும் என நாம் தினமும் வியக்கின்றோம்.

நாத்திகனின் மூட நம்பிக்கை

ஒரு கருத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், “ஏன், எதற்கு, எவ்வாறு” என வினாக்களை எழுப்பி ஆய்ந்தறிவதே புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்யாமல், அதனை நம்பினால், அதை மூட நம்பிக்கை என்று கூறலாம். கடவுளை நம்பாத நாத்திகர்கள் கடவுளை நம்பும் மக்களை “மூட நம்பிக்கையில் வாழ்பவர்கள்” என்று கூறுகின்றனர். ஆயினும், நாத்திகர்கள் கடவுளைப் பற்றி ஆய்வு செய்தார்களா? கடவுளை விஞ்ஞான ரீதியில் அணுகுவதற்கு முயன்றார்களா? சற்று ஆராயலாம்.

பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று கூறியதும், ஏன் பார்க்கக் கூடாது, திரைப்படம் பார்ப்பதால் நமது துன்பங்களை சிறிது நேரத்திற்காவது மறந்து இன்பமாக இருக்கலாமே என்று வினாக்களை எழுப்புகின்றனர். அதைப் பற்றி சிறிது ஆராயலாமே.

இராவணன் தமிழனா?

உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே மாறுபட்ட கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில் தமிழர்களின் உணர்வைத் தூண்டி அவர்களை ஆன்மீகத்தின

Latest