வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்.
சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர் கூறுகின்றனர். ஆம், மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிவுபடுத்தும் வர்ணாஷ்ரம முறையினை வழங்கியவர் கிருஷ்ணரே,
கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர் என்று பொருள் கூறலாம். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது. அதாவது, கட்டுப்படுத்துபவர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது. மேலும், கிருஷ்ணர் ஈடுஇணையற்ற நபர் (பரம புருஷர்), ஈடுஇணையற்ற புகலிடம் (பரந்தாமர்), ஈடுஇணையற்ற பிரம்மன் (பர பிரம்மன்) என்று பல வழிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர், “குலதெய்வ கோயிலுக்குப் போகாமல் திருப்பதி கோயிலுக்குச் சென்றால்,...
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப் பெறுவதற்கு இதுவே அடிப்படை என்று சொல்லலாம். ஆண், பெண், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், கற்றறிந்த பிராமணர், ஆட்சியாளர், பிரம்மசாரி, இல்லறத்தவன், சந்நியாசி என எல்லா தரப்பட்ட மக்களின் கடமையையும் மனு ஸ்மிருதி தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளது.