“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில் ஏன் அவதாரங்கள்? இறைவனுக்கு எந்தத் தேவையும் கிடையாது, நீங்கள் ஏன் அவருக்கு உணவு படைக்கிறீர்?” பதில்களை அறிவீர்!
ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை, பின்னோக்கி ஓடுகிறோமா? நூற்றுக்கணக்கான நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர்; நிஜ வாழ்வில் டஜன் கணக்கில்கூட இல்லை. காதல், அன்பு, பாசம் முதலியவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம்; நிஜ வாழ்வில் எத்தனையோ விவாகரத்துகள், எத்தனையோ பங்காளி சண்டைகள் நிகழ்கின்றன.
ஸ்ரீபாத இராமானுஜர் தாம் பெற்ற மந்திரத்தை உலக மக்களுக்கு தாராளமாக உபதேசித்து அருளிய திருகோஷ்டியூர் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அடியேனின் நீண்ட நாள் ஆசை, அவரது அருளால் ஒருநாள் நிறைவேறியது.
ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)
பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம், பகவத் தரிசனம் முதலிய அத்தியாவசிய ஆன்மீக நூல்களைப் படிக்கச் சொன்னால், “நேரமில்லை, நேரம் கிடைத்தால் படிக்கிறேன்,” என்று கூறிய பலர், இயற்கையின் ஏற்பாட்டில் கிடைத்த நேரத்தில் என்ன செய்தனர்?