- Advertisement -spot_img

CATEGORY

சமுதாய பார்வை

நாத்திகனின் மூட நம்பிக்கை

ஒரு கருத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், “ஏன், எதற்கு, எவ்வாறு” என வினாக்களை எழுப்பி ஆய்ந்தறிவதே புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்யாமல், அதனை நம்பினால், அதை மூட நம்பிக்கை என்று கூறலாம். கடவுளை நம்பாத நாத்திகர்கள் கடவுளை நம்பும் மக்களை “மூட நம்பிக்கையில் வாழ்பவர்கள்” என்று கூறுகின்றனர். ஆயினும், நாத்திகர்கள் கடவுளைப் பற்றி ஆய்வு செய்தார்களா? கடவுளை விஞ்ஞான ரீதியில் அணுகுவதற்கு முயன்றார்களா? சற்று ஆராயலாம்.

பெட்ரோல் நாகரிகம்

கடந்த 2017 மே மாதத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான டோனி சேபா என்பவர் 2025ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனைத்து நாடுகளும் நிறுத்தி விடும் என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் அனைத்தும் குப்பைக்குச் சென்று விடும் என்றும் கருத்து தெரிவித்து உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்றைய உலகப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரும்பாலான ஊடகங்கள் இந்த முக்கிய செய்தியை இருட்டிப்பு செய்து விட்டன.

பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று கூறியதும், ஏன் பார்க்கக் கூடாது, திரைப்படம் பார்ப்பதால் நமது துன்பங்களை சிறிது நேரத்திற்காவது மறந்து இன்பமாக இருக்கலாமே என்று வினாக்களை எழுப்புகின்றனர். அதைப் பற்றி சிறிது ஆராயலாமே.

நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும் எண்ணற்றவை, இன்று அவை வெறும் போக்கிடமாக இருக்கின்றன. காவிரி, பாலாறு, வைகை, நொய்யல், மோயாறு, பவானி, தாமிரபரணி ஆகிய ஏழு ஆறுகளும் நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய ஆறுகளாக இருந்துள்ளன. இந்த பெரிய ஆறுகளில் தாமிரபரணி தவிர மற்றவை அனைத்தும் வறண்டு விட்டன, இதர 95 ஆறுகளைப் பற்றி கூற வேண்டிய தேவையே இல்லை.

சமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா?

உலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய பெரியபெரிய ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் இல்லாதவர்களை இன்றைய உலகம் வினோதமாகக் காண்கிறது. ஆன்மீகத்தை அறிய ஆவல் கொண்டுள்ள நபர்களும்கூட, இவற்றின் மூலமாக ஆன்மீக விஷயங்களைப் பெற விரும்புகின்றனர். எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை விவாதிக்கலாம்.

Latest

- Advertisement -spot_img