- Advertisement -spot_img

CATEGORY

பகவத் கீதை

பகவத் கீதை

இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

பகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன், எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது போன்றவற்றை அறிய விரும்புவோர் கீதையைப் படிக்கலாம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல், உலக வாழ்க்கை என்னும் நிரந்தர போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் எல்லா ஜீவன்களுக்கும் உரியதாகும். இதைப் படிப்பதால், உலக வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர்...

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

ஆத்மா தனது தூய நிலையில் ஜட இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக உள்ளான், அந்த நிலையில் அவன் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுகிறான். ஜட இயற்கையின்

Latest

- Advertisement -spot_img