- Advertisement -spot_img

CATEGORY

பக்தி கதைகள்

இலக்ஷ்மணரின் உயர்ந்த நெறி

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை; மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தேவகியின் குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது ஏன்?

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.

இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்ததற்கான காரணம்

அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து விடுவேன் என்று மிரட்டினான் என்பதும் உலகம் அறிந்த உண்மை. இராவணன் சீதையை பலவந்தமாக அனுபவிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் சில முட்டாள்கள் இராவணனை உத்தமன் என்றுகூட போற்றுகின்றனர். இராவணனுக்கு ஏதோ சாபம் இருந்தது என்பதை சிலர் கேட்டிருக்கலாம். அஃது என்ன சாபம், எவ்வாறு யாரிடமிருந்து வந்தது என்பதே இங்குள்ள தெரியாத துணுக்கு.

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

தனது பக்தன் யாருக்கேனும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் கிருஷ்ணர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். சில நேரத்தில் கிருஷ்ணர் தான் கொடுத்த வாக்குறுதியைக்கூட மீறலாம். ஆனால் தனது பக்தன் கொடுத்த வாக்குறுதியை என்றும் மீற மாட்டார். அதனால் தான் தனது பக்தன் என்றும் அழிவடைய மாட்டான் என்று பகவத் கீதையில் (9.31) கிருஷ்ணர் கூறுகிறார். அதையும்கூட பகவான் கிருஷ்ணர் தன்னுடைய பக்தனான அர்ஜுனனைக் கொண்டு கூறுகிறார். அதாவது தனது பக்தனால் ஏதேனும் உரைக்கப்பட்டால், கிருஷ்ணர் அதனை தனது வார்த்தைகளைக் காட்டிலும் முக்கியமானதாக ஏற்கிறார். இது பக்தியின் இரகசியமாகும்.

Latest

- Advertisement -spot_img