- Advertisement -spot_img

CATEGORY

ஞான வாள்

மதத்தின் போர்வையில் நாஸ்திகம்

நாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.

எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை அடைகின்றதா?

பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது.

மக்களாட்சி-பிரச்சனைகளும் தீர்வுகளும்

"மக்களால் மக்களுக்காக" என்று கூறப்படும் மக்களாட்சியின் முக்கிய அங்கம் தேர்தல். தற்போது தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அனைத்து மக்களும் தேர்தல் செய்திகளை மிகமிக ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஆன்மீக இதழில் தேர்தல் பற்றிய கட்டுரையா என்று சிலர்

மதச்சார்பின்மையின் போர்வையில் நாஸ்திகம்

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.

உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.

Latest

- Advertisement -spot_img