- Advertisement -spot_img

CATEGORY

முழுமுதற் கடவுள்

பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா, கற்பனை காவிய நாயகனா?

இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன. வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்காங்கே வேறுபாடு உள்ளது. இராமாயணம் ஒரு வரலாறு என்றால், ஒரே சம்பவத்தை பல எழுத்தாளர்கள் எப்படி பலவாறு எழுதியிருப்பர்?”

பயமே பயப்படுகிறதே

குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.

ராதையின் திருநாமம் ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லையா?

கிருஷ்ணர் என்றாலே அனைவரின் மனதிலும் உடனடியாக ராதையின் நினைவும் வருகிறது. ராதையும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாதவர்கள். கிருஷ்ண பக்தர்களில் அவரின் காதலியர்களாக விருந்தாவனத்தில் வசித்த கோபியர்களே தலைசிறந்தவர்கள் என்பதையும் அந்த கோபியர்களின் மத்தியில் ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள் என்பதையும் பலரும் அறிவர். அதே சமயத்தில், கிருஷ்ண லீலைகளை விரிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் இல்லாதது ஏன் என்பது சில பக்தர்களின் மனதில் வருத்தத்தையும், வேறு சிலரின் மனதில், “ஸ்ரீமதி ராதாராணியே தலைசிறந்த பக்தை என்பது சரியா?” என்ற ஐயத்தையும் ஏற்படுத்தலாம். அதற்கு விளக்கமளிக்க முயல்வோம்.

கிருஷ்ணரின் விசேஷ வைபவங்கள்

பௌதிக உலகில் எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்போதெல்லாம் தாம் அவதரிப்பதாக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். அவதாரம் என்பது பகவான் தமது சொந்த உருவில் ஆன்மீக உலகிலிருந்து இறங்கி வருவதைக் குறிக்கின்றது. அவ்வாறு அவர் வரும்போது, மனித உருவம், விலங்கு உருவம், பாதி மனித பாதி விலங்கு உருவம் (இராம, வராஹ, நரசிம்ம) என பல்வேறு ரூபங்களில் தோன்றுகிறார், இந்த ரூபங்கள் சாதாரண பௌதிகத் தோற்றங்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவருமே பூரண ஞானத்தையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாகப் பெற்றவர்கள் (ஸச்-சித்-ஆனந்த). பகவானின் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அவரது வைபவங்களும் கணக்கிட முடியாதவை.

அருளிச் செயலும் அருளாளனும்

திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும்.

Latest

- Advertisement -spot_img