- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.

போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

ஸ்ரீல பிரபுபாதர்: எங்கெல்லாம் எனது புத்தகங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நமது இயக்கத்திற்கு வெற்றி நிச்சயம். மக்கள் அறியாமையில் உள்ளனர்; தற்காலிகமான ஜடவுடலே எல்லாம் என்று கருதுகின்றனர். நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த புத்தகங்கள் வேதங்களில் வழங்கப்பட்டுள்ள ஆத்ம விஞ்ஞானத்தை நமது ஆன்மீகத் தன்மை மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய அறிவைத் தரவல்லவை.

ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கும்படி தங்களது ஐக்கிய நாட்டு சபையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளேன், அதே போல யானைகளும் எறும்புகளும்கூட படைக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? சூரியனும் சந்திரனும் சரியான நேரத்தில் உதிக்கின்றன, பருவ காலங்கள் மாறுகின்றன. இவற்றின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர்

கிருஷ்ணரே அனைவரையும் ஒருங்கிணைப்பவர் உலகிலுள்ள பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆன்மீக இயக்கத்திற்கான தேவைகுறித்து வினவிய கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கிற்கு தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அளித்த ஆர்வத்தைத் தூண்டும் பதில்கள் ஆலன் கின்ஸ்பெர்க்: கிருஷ்ண பக்தி இயக்கமோ வேறு எந்த சமய இயக்கமோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது. ஆனால், அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆன்மீக இயக்கத்திற்கான தேவை அமெரிக்காவில் உள்ளது.

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.

Latest

- Advertisement -spot_img