- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

சந்நியாசம் ஏற்று புரியை அடைதல்

எனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

நவத்வீபத்தில் ஸ்ரீ சைதன்யர்

இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.

மஹாபிரபுவின் விருந்தாவன யாத்திரை

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.

மஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.

Latest

- Advertisement -spot_img