ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின்...
பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும் இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர்.
அஜாமிளனின் வரலாற்றை அறிந்த பின்னர், பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வருமாறு வேண்டினார். “ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் பலவித ஜீவராசிகள் படைக்கப்பட்டதை (மூன்றாம் ஸ்கந்தத்தில்) விளக்கினீர்கள். இதைப் பற்றி மேலும் விவரமாக அறிய விரும்புகிறேன். தயைகூர்ந்து விளக்கியருளுங்கள்.”