- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

கொரோனா, ஓர் ஆன்மீகப் பார்வை

கொரோனா—எங்கும் பீதி, எல்லாரிடமும் பீதி. உலகச் செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் வரலாற்றில் முதல்முறையாக ஒரே செய்தி அடைத்துக் கொண்டுள்ளது. நாடு, மொழி, இனம் என எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரே விஷயமாக கொரோனா திகழ்கிறது. ஆட்சியாளர்கள், எதிர்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள், ஜோதிட அறிஞர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் முதலியோர் இதுகுறித்து தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

கொரோனாவும் ஸநாதன தர்மமும்

“ஸநாதன தர்மத்தை வேரறுப்போம்,” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சில நாத்திக கட்சிகள் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வருவதாக நண்பர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆயினும், இன்றோ கொரோனாவின் காரணத்தினால் உலக நாடுகள் ஸநாதன தர்ம பண்பாடுகளை ஏற்று வருவதைப் பார்க்கும்போது, ஸநாதன தர்மம் எனும் அரிய பொக்கிஷத்தைப் புறக்கணிக்கும் நாத்திகர்களின் மடமை வியப்பாக உள்ளது.

அழகும் அகோரமும்

ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள் தனது அரண்மனையின் மாடத்தில் பந்து விளையாடியதைப் பார்த்த விஸ்வாவஸு என்ற கந்தர்வன் அவளது அழகில் மயங்கி விமானத்திலிருந்து கீழே விழுந்தான். கந்தர்வனையே மயக்கும் அழகுடையவள் அவள். அதே சமயத்தில், அவள் கற்பில் மிகச்சிறந்தவளாக இருந்தாள். அவள் நாரத முனிவருடைய ஆலோசனையின்படி, பக்தியில் சிறந்த கர்தம முனிவருக்கு தன் மனதைக் கொடுத்தாள்.

மேற்கத்திய பசுக்கள் உண்மையான பசுக்களா?

கடந்த சில வருடங்களாக பல்வேறு பொய்யான தகவல்கள் இந்தியாவில் வாட்ஸ்ஆப் முதலிய செயலிகளின் மூலம் விரைவாகப் பரவி, மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துள்ளன. அவற்றில் ஒன்று: ஜெர்ஸி பசு உட்பட மேற்கத்திய நாட்டின் பசுக்கள் உண்மையான பசுக்கள் அல்ல, அவை பன்றியையும் எருமையையும் சேர்த்து கொண்டு வரப்பட்ட கலப்பினம். இந்தக் கூற்று எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் முற்றிலும் அபத்தமானது என்றபோதிலும், பல்வேறு இந்தியர்கள் இதனை நம்புகின்றனர்.

கிருஷ்ண பக்தி தோஷங்களைப் போக்குமா?

கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: “இஸ்கானிற்கு வந்து ‘ஹரே கிருஷ்ண’ ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா?” செவ்வாய் தோஷம், சனி தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு தோஷம், ஸர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம் என தோஷங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவனது ஜாதகத்தை அலசி ஆராயும்போது, அவனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு தோஷம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பதால், பாமரர் முதல் பண்டிதர் வரை பலரும் பரிகாரத்தைத் தேடி அலைகின்றனர்.

Latest

- Advertisement -spot_img