- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

கம்யூனிச ரஷ்யாவில் கிருஷ்ண பக்தி எவ்வாறு பரவியது?

மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய மக்கள், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினைப் பரப்பியவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமுமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றுவர் என்றும் அன்றே கணித்தார். இறுதியாக, பேராசிரியர் கோதோஸ்கியுடன் சில மணி நேரங்கள் உரையாடிய ஸ்ரீல பிரபுபாதர் கம்யூனிச கொள்கையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு தமது குறுகிய ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் ரஷ்யாவிற்குச் செல்லவில்லை.

ரோபோக்களுக்கு உணர்ச்சி சாத்தியமா?

ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், அவ்வாறு சிந்தித்து செயல்படுவதற்கான திறனும் உணர்ச்சிகளும் ஆத்மாவிடமிருந்து வருகின்றன, ஜடப் பொருட்களின் கலவையான ரோபோவினால் அவை இயலாதவை. உணர்ச்சி என்பது உயிரிலிருந்து மட்டுமே வரக்கூடும். உணர்வுகளை இயந்திரத்தின் மூலமாகப் பெறுவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும், நாம் பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் அந்த இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.

பக்தி யோக வாழ்க்கை

நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு துன்பத்திற்கான மூல காரணமாகும். ஜட உலகின் தொடர்பினால் ஜட இயற்கையின் முக்குணங்களான ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்திற்கு ஜீவன் உட்படுகிறான். ஆனால், உண்மையில் பரம புருஷரைப் போன்று ஜீவன்களும் ஆனந்தமயமானவர்களே. ஜீவன்கள் தற்போதைய கட்டுண்ட நிலையில் தங்களது ஸ்வரூபத்தினை (நான் பரம புருஷ பகவானின் சேவகன் என்பதை) மறந்துள்ளனர். பக்தித் தொண்டின் மூலமாக அந்த ஸ்வரூப நிலையினை மீண்டும் அடையலாம்.

பாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்?

பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்த இந்தக் கருத்து புரட்சி இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவுகள் அங்கங்கே இருப்பதை அனைவரும் அறிவர். இதனை ஊரறியத் தெரிவிப்பது குற்றத்தைக் குறைக்குமா, வேறு தீர்வுகள் உண்டா, சற்று ஆராய்வோம்.

கோவிந்த நாமம், கேலிக்குரியதா?

“கோவிந்தா, கோவிந்தா…,” “எல்லாம் கோவிந்தாவா?” முதலிய பேச்சுகள் இன்றைய தமிழர்களிடையே தோல்வி, ஏமாற்றம், இழப்பு முதலிய நிகழ்வுகளில் ஒரு வழக்கமாக மாறி விட்டது. “கோவிந்தா” என்ற பெயரைக் கேட்டால், அபசகுனம் என்று பலரும் நினைக்கின்றனர்; ஏதேனும் முக்கிய பணிக்குச் செல்கையில் யாரேனும் “கோவிந்தா” என்று உச்சரித்துவிட்டால், அந்த காரியம் நிறைவேறாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர். கோவிந்த நாமத்தைக் கேலி செய்து எத்தனை எத்தனையோ திரைப்படக் காட்சிகள் வந்துள்ளன. இந்தக் கேலியிலும் அச்சத்திலும் வழக்கத்திலும் ஏதேனும் உண்மை உள்ளதா? சற்று ஆராய்வோம்.

Latest

- Advertisement -spot_img