- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

சுஸ்ருதரின் ஆயுர்வேத சிகிச்சை

பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உலக நியதியாகும். நம் வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகிய நான்கும் மருத்துவத்துடன் தொடர்புடையவை . பிறக்கும்போது மருத்துவர் தேவைப்படுகிறார், இறக்கும்போது மருத்துவர்கள் வாழ்வை நீட்டிக்க முயல்கின்றனர், முதுமை யின் பிரச்சனைகளைச் சமாளிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்; நோயினைப் பொறுத்தவரை யில் மருத்துவரின் தேவையைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை.

பெட்ரோல் நாகரிகம்

கடந்த 2017 மே மாதத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான டோனி சேபா என்பவர் 2025ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனைத்து நாடுகளும் நிறுத்தி விடும் என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் அனைத்தும் குப்பைக்குச் சென்று விடும் என்றும் கருத்து தெரிவித்து உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்றைய உலகப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரும்பாலான ஊடகங்கள் இந்த முக்கிய செய்தியை இருட்டிப்பு செய்து விட்டன.

தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

திருநாமத்தை ஏற்போம்!

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.

மஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும் உலக வரைபடம் உட்பட மிகவுயர்ந்த ஸநாதன தர்மத்தின் தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமாக துல்லிய விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களில் வாழ்பவர்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் உள்ளனர், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பின்தங்கியவர்கள்,” என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு மாற்று கருத்தைத் தரவல்லது.

Latest

- Advertisement -spot_img