- Advertisement -spot_img

TAG

bhakti

மழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்

சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் கண்முன் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகள் ஆழமான நீச்சல்குளம் போல் திடீரென உருவானதை கண்ட மக்கள் மனபிரம்மைக்கு உள்ளாகி செய்வதறியாது தவித்தனர். இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கே பரிதவித்தனர்.

ஏகலைவனின் குரு பக்தி

குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால்தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார். கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.

செய்யும் தொழிலே தெய்வமா?

இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.

படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஏற்ற பக்தி

பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும். ஏனெனில், பக்தி என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டுகளைக் குறிக்கும். பகவானின் திருநாமத்தைப் பாடுதல், பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், அவற்றைக் கேட்டல், பகவானுடைய விக்ரஹத்திற்கு ஆரத்தி, நைவேத்தியம் போன்ற சேவைகளைச் செய்தல், பக்தர்களுக்குப் பணிவிடை செய்தல், பிரசாதம் விநியோகித்தல், கோவிலை சுத்தம் செய்தல், பக்தித் தொண்டை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்தல் போன்ற பல்வேறு செயல்கள் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றன.

சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்

பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை மேல்நாடுகளில் பரப்பினார். சித்தாந்தத்தினை (ஆன்மீக அறிவின் இறுதி நிலையினை) மக்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட இந்த மஹாத்மாவின் புகழ்பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையைப் பெறுவோமாக.

Latest news

- Advertisement -spot_img