- Advertisement -spot_img

TAG

death

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.

மரணம் நமது உற்ற நண்பனா?

ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது. இயற்கையானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கும் ஆசைகளுக்கும் தகுந்தவாறு மறுபிறவியில் அவருக்கு உடல் கொடுக்கப்படுகின்றது. இறக்கும் நேரத்தில் யார் எதை நினைக்கின்றாரோ அதை நிச்சயம் அடைவர் (பகவத் கீதை 8.6).

Latest news

- Advertisement -spot_img