- Advertisement -spot_img

TAG

devotees

பக்தர்களுக்கு கொரோனா வந்தால்?

கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா வந்தால், என்ன செய்ய வேண்டும்? அரசாங்கமும் மருத்துவர்களும் வழங்கக்கூடிய சிகிச்சைகளுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதுடன் இணைந்து, பக்தர்கள் (உண்மையில், எல்லா மக்களும்) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நன்மை விளையும்.

துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.

கிருஷ்ண பக்தனுக்கு எந்த இழப்பும் இல்லை

கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

வரதரின் பக்தர்கள்

வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு அருள்புரிவதால் இப்பெருமாளை வரதர் என்று அன்போடு அழைப்பர். வரதரை தரிசிப்பவர்கள் மண்ணுலகின் பாக்கியவான்களாக போற்றப்படுகின்றனர். வரதரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதன் மூலம் அவர் மீதான அன்பை பெருமளவில் அதிகரித்துகொள்ள இயலும். வரதருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான லீலைகள் மிகவும் புகழ் பெற்றவை. வரதரின் தலைசிறந்த பக்தர்களான காஞ்சிபூர்ணர், இராமானுஜர், மற்றும் கூரத்தாழ்வாரிடம் வரதர் மேற்கொண்ட லீலைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று கூறியதும், ஏன் பார்க்கக் கூடாது, திரைப்படம் பார்ப்பதால் நமது துன்பங்களை சிறிது நேரத்திற்காவது மறந்து இன்பமாக இருக்கலாமே என்று வினாக்களை எழுப்புகின்றனர். அதைப் பற்றி சிறிது ஆராயலாமே.

Latest news

- Advertisement -spot_img