- Advertisement -spot_img

TAG

duruva maharaja

துருவ மன்னரின் சந்ததியினர்

மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.

துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.

Latest news

- Advertisement -spot_img