- Advertisement -spot_img

TAG

hari nama

ஹரி நாமத்தின் மகிமை

அஜாமிளனின் குற்றத்தை விளக்கிக் கூறிய எம தூதர்களிடம் விஷ்ணு தூதர்கள் பின்வருமாறு கூறினர்: “பொதுவாக பாமர மக்கள் எது தர்மம், எது அதர்மம் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பொதுமக்கள் சமூகத்திலுள்ள தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி நடப்பர். எனவே, தலைவனின் நடத்தை மிகவும் பொறுப்புமிக்கதாகும். “ஒரு தலைவன் இரக்க மனம் உடையவனாக, மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவனாக இருக்க வேண்டும். வாழ்வின் இறுதிக் குறிக்கோள் தன்னுணர்வைப் பெற்று—முழுமுதற் கடவுளுடனான தனது நித்திய உறவை அறிந்து—அதனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, அவரது நித்திய உலகைச் சென்றடைவதாகும். எனவே, தலைவனானவன் இந்த உண்மையான இலட்சியத்தை அடைவதற்கு மக்களுக்கு வழிகாட்டுபவனாக இருக்க வேண்டும்.”

திருநாமத்தை ஏற்போம்!

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

பருவமழை தீர்வு என்ன?

ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வமுடையோர் சற்றும் தயங்காமல் இதனை முனைப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வோம் நாமத்தின் மகிமைகளை

அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.

Latest news

- Advertisement -spot_img