- Advertisement -spot_img

TAG

lectures

பக்குவமான சமுதாய அமைப்பு

நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் கிருஷ்ணருடன்

பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டியிருந்தது. குருக்ஷேத்திர போர் ஒரே குடும்பத்தினுள் நடைபெற்ற சண்டையாகும். குடும்பத்தில் பலர் மறுபக்கமும் சிலர் அர்ஜுனனின் பக்கமும் குழுமியிருந்தனர். பீஷ்மதேவர், சோமதத்தர் போன்ற பெரியவர்கள், குரு துரோணாசாரியர் மற்றும் பலரையும் அவன் போர்க்களத்தில் சந்திக்க நேர்ந்தது.

தீவிரமான பக்தித் தொண்டு

ஆனால் நாம் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளோம், ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஆனால் இந்த உலகம் து:காலயம் அஷாஷ்வதம் (துன்பத்தின் இருப்பிடம்) என்று புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உலகம் துன்பத்திற்கான இடமாகும், இந்த உடல் துன்பத்திற்கான உடலாகும், இந்த பூமி துன்பத்திற்கான பூமியாகும். ஆனால் நாம் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை

புலனின்பமும் மனித வாழ்க்கையும்

ஸ்ரீ-பிரஹ்லாத உவாச மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம் அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் புன: புனஷ் சர்வித சர்வணானாம் "பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர்.

பக்தித் தொண்டின் சுவை

பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான்.

Latest news

- Advertisement -spot_img