- Advertisement -spot_img

TAG

mahabarath

மஹாபாரதம் பக்தர்களுக்கு ஓர் எச்சரிக்கை

புராணங்களும் இதிகாசங்களும் உண்மையில் நிகழ்ந்த சரித்திரங்கள், இந்த சரித்திரங்கள் கடவுளின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவரது பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் எழுத்து வடிவில் நமக்கு படம் பிடித்துக் காண்பிக்கின்றன. இதில் தங்களது சொந்த கற்பனைகளை சொருகுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனின் செயல் சரியா ?

மிகவும் சிக்கலான தர்மத்தின் நெறிமுறைகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் இதிகாசமே மஹாபாரதம். ஆயினும், தர்மத்தின் கொள்கைகளை அதர்மத்தில் ஊறித் திளைத்து நிற்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், மஹாபாரதத்தின் சில பகுதிகள் பொதுமக்களுக்கு புரிவதில்லை. தர்மத்தினை எடுத்துரைக்கும் நூலில் அதர்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் சுட்டிக் காட்டும் உதாரணங்களில் ஒன்று: பீமன் துரியோதனனை தொடையில் அடித்து வதம் செய்த நிகழ்ச்சியாகும். பீமனின் அந்த செயலை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

மஹாபாரதம், நம்பக்கூடியதா?

அன்றும் இன்றும் என்றும் மஹாபாரதம் மக்களைக் கவரும் ஒரு காவியம், இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மஹாபாரதக் கதைகள் தொன்றுதொட்டு பாரதத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டு வந்தன, ஒவ்வொரு மாலையிலும் மஹாபாரதம் கேட்பது என்பது எல்லா ஊர்களிலும் இருந்துவந்த சராசரி பழக்கம். தொலைக்காட்சியின் வருகையினாலும் நவீன வாழ்க்கை முறையினாலும் அத்தகைய பழக்கம் இன்று ஏறக்குறைய அழிந்துவிட்டது என்று கூறலாம். இருப்பினும், அதே தொலைக்காட்சியில் மஹாபாரதம் ஒளிபரப்பப்படும்போது, அஃது இன்றும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

வஞ்சகன் கண்ணனா? கர்ணனா?

கர்ணன்–மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம்.

பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரம்

குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.

Latest news

- Advertisement -spot_img