தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.