- Advertisement -spot_img

TAG

Rishabhadeva

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.

ரிஷபதேவரின் உபதேசங்கள்

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்து செவ்வனே ஆட்சி செய்தார். அவர் நன்மக்களைப் பெறும் நோக்கத்துடன் மந்தார மலையின் ஒரு குகையினுள் நுழைந்து, பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், பூர்வசித்தி எனும் தேவ கன்னிகையை அவரிடம் அனுப்பி வைத்தார்.

Latest news

- Advertisement -spot_img