- Advertisement -spot_img

TAG

secret knowledge

உண்மையான யோகத்தின் இரகசியங்கள்

எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.

மிக இரகசியமான அறிவு

ஸ்ரீ பகவான் உவாச. பகவான் எனும் இந்த வார்த்தையை நான் பலமுறை விளக்கியுள்ளேன், இதற்கு உன்னத அதிகாரி” என்று பொருள். வேத இலக்கியங்கள் பகவான் எனும் சொல்லை பிறருக்கும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். இருப்பினும், அதனால் அவர்கள் பகவான் கிருஷ்ணருடன் சமநிலையில் உள்ளனர் என்பதாகாது. சில சமயங்களில் நாரத முனிவரும் பகவான்” என்று அழைக்கப்படுகிறார், சிவபெருமானுக்கும் பகவான்” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது, விஷ்ணு தத்துவங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரைப் பற்றி கூறும்போது ஸ்ரீமத் பாகவதம், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்று கூறுகிறது.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை உணராத முட்டாள்கள் அவரை ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரை உள்ளபடி ஏற்றுக் கொள்ளாமல், அவரை ஒரு சக்தியுடைய மனிதனாகவோ, கர்மத்தினாலும் தவத்தினாலும் அற்புத ரூபம் பெற்றவராகவோ, அருவமான அவர் ரூபத்தைத் தாங்கி வருவதாகவோ அந்த முட்டாள்கள் கற்பனை செய்கின்றனர். மனிதரைப் போல தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல; அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, மற்றும் ஆனந்தமயமானது. அவர் இவ்வுலகில் தோன்றும்போது, தனது நித்திய உருவில் தனது அந்தரங்க சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்பட்டு, தங்களது முக்திக்கான ஆசைகள், கர்மங்கள், அறிவுப் பயிற்சிகள் என அனைத்திலும் தோல்வியை சந்திக்கின்றனர்.

Latest news

- Advertisement -spot_img