- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

வேத ஞானமெனும் மரத்தின் கனிந்த பழம்

ஸ்ரீமத் பாகவதம் வேத இலக்கியங்களின் கனிந்த பழமாகும். வேத இலக்கியம் கற்பக மரத்துடன் (கல்ப–தருவுடன்) ஒப்பிடப்படுகின்றது. கல்ப என்றால் “விருப்பம்” என்றும், தரு என்றால் “மரம்” என்றும் பொருள். பௌதிக உலகில் வாழும் நமக்கு கல்ப–தருவைப் பற்றிய அனுபவம் ஏதும் இல்லை; கல்ப–தருவானது ஆன்மீக உலகமான கிருஷ்ண லோகத்தில் காணப்படக்கூடியதாகும். பௌதிக உலகில் மாமரத்திலிருந்து மாம்பழங்களை மட்டுமே பெற முடியும், இதர பழங்களைப் பெற முடியாது. ஆனால் கல்ப–தருவிடமிருந்து எல்லா வகையான பழங்களையும் பெற முடியும்.

நாட்டின் வளமும் நாட்டின் தலைவனும்

குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் யுதிஷ்டிர மஹாராஜருக்கு அரியணை ஏற விருப்பமே இல்லை. “எனக்காக எத்தனை மக்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர், நான் பெரும் பாவம் செய்தவன். அரியணைக்குத் தகுதியற்றவன்,” என்று அவர் எண்ணினார். ஆயினும், சிறந்த மஹாபுருஷர்களான பீஷ்மதேவர், பகவான் கிருஷ்ணர், மற்றும் வியாஸதேவரும் அவரிடம் கூறினர், “இல்லை. உங்களின் மீது பிழையில்லை, போர் நிகழ்ந்தது சரியே! நீங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்.” அந்த மஹாபுருஷர்கள் யுதிஷ்டிரரின் மீது தவறில்லை என்று கருதியதாலேயே யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

நமக்காக பகவான் மேற்கொள்ளும் எண்ணற்ற அவதாரங்கள்

கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்). ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது. எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.

புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம்

பௌதிக உலகில் நாம் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்கின்றபோதிலும், சில நேரங்களில் மட்டுமே துன்புறுவதாக நாம் சொல்லிக்கொள்கிறோம்; ஏனெனில், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி எதிர்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும் என நாம் நம்புகிறோம். உண்மையில், பௌதிக உலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மரணத்தை வெல்ல முடியும் என்று கனவு காண்கின்றனர். பலரும் இதே கனவில் மிதக்கின்றனர். ஆனால், “எவ்வளவு இனிமையாக இருந்தாலும், எதிர்காலத்தை நம்பாதே” என்பது பண்டிதர்களின் வாக்கு.

உண்மையும் அழகும்

Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’ என்ற அற்புதமான கதையை ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். உண்மையின் இயல்பையும் அழகின் இயல்பையும் அவர் தெளிவாக விளக்குகிறார். இந்த விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில், உள்ளுறையும் ஆத்மாவை அறிய முற்படுபவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.

Latest news

- Advertisement -spot_img