- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

ஆன்மீக கலாச்சாரத்தை மறவாதீர்

இன்று பண்பாட்டையும் வணிகத்தையும் பற்றிப் பேச இருக்கிறேன். வணிகம் என்பது ஒரு தொழிற்கடமை. நமது வேதப் பண்பாட்டில் பலவிதமான தொழிற்கடமைகள் உள்ளன. பகவத் கீதை (4.13) கூறுகிறது, சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண–கர்ம–விபாகஷ:, மக்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நால்வகைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன—பிராமணர் (புத்திசாலிகள் மற்றும் ஆசிரியர்கள்), சத்திரியர் (இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள்), வைசியர் (விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்), மற்றும் சூத்திரர் (தொழிலாளிகள்). இவ்வாறாக, பல்வேறு திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்கள் உள்ளன.

மகிழ்ச்சிக்கான உண்மையான வழி

இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் “ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல்” எனும் எளிய வழிமுறையின் மூலம் மக்கள் மீண்டும் ஆன்மீக நிலைக்கு வர உதவி செய்கிறது. பெளதிக வாழ்வின் துயர‍ங்களை முடிவிற்குக் கொண்டு வருவதே மனித வாழ்வின் நோக்கமாகும். தற்போதைய சமுதாயம் பெளதிக முன்னேற்றத்தின் மூலமாக இத்தகு பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டு வர முயல்கிறது. ஆயினும், இந்த பெளதிக முன்னேற்றத்தினால் மனித சமுதாயம் மகிழ்ச்சியாக இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தலைசிறந்த கலைஞர் யார்?

கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.

மனிதன் மனிதனாக வாழ

ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில் பிறக்கின்றனர். இருள் சூழ்ந்த இந்த ஜடவுலகானது சில நேரங்களில் சூரியன், நிலா, நெருப்பு அல்லது மின்சாரத்தால் ஒளியூட்டப்படுகிறது. ஆனால், அதன் இயற்கை தன்மை இருளே. மிகவுயர்ந்த நபரான பிரம்மாவிலிருந்து கடைநிலையிலுள்ள எறும்பு வரை ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில்தான் பிறக்கின்றனர்.

ஆத்மா ஏன் வீழ்ச்சியடைந்தான்?

கிருஷ்ணருடன் இருந்த ஜீவன், இந்த பெளதிக உலகில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தான் என்னும் வினாவினை பலரும் வினவுகின்றனர். அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவனின் நிலையானது ஜட சக்தியில் அவன் மயக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது; உண்மையில், அவன் வீழ்ச்சியடையவில்லை. மேகக் கூட்டம் நகரும்போது அதற்குப் பின்னால் உள்ள நிலாவும் சேர்ந்து நகருவதைப் போன்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நிலா நகருவதே இல்லை. அதுபோலவே, பரமனின் ஆன்மீகப் பொறியாகிய ஜீவன் வீழ்ச்சியடைவதே இல்லை. ஆயினும், “நான் வீழ்ச்சியடைந்துள்ளேன், நான் பெளதிகமானவன், நான் இந்த உடல்,” என்று அவன் நினைத்துக் கொண்டுள்ளான்.

Latest news

- Advertisement -spot_img