- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

பக்தித் தொண்டின் மகிமைகள்

கபிலதேவர் தொடர்ந்தார், “அன்னையே, காலையில் உதிக்கும் கதிரவன் போன்ற கண்களுடன் கூடிய என் வடிவத்தின் சிரித்த முகத்தை என் பக்தர்கள் எப்போதும் பார்க்கின்றனர். மேலும் அவர்கள் என்னுடன் நட்புடன் பேசுகின்றனர். என்னுடைய இனிமையான சொற்களைக் கேட்டு தூய பக்தர்கள் ஏறக்குறைய பிற எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுதலையடைகின்றனர். மேலும், பெருமுயற்சியின்றியே எளிதில் வீடுபேறு (முக்தி) அடைகின்றனர். காரணம், அவர்கள் எனது பக்தித் தொண்டில் ஆழ்ந்துவிடுகின்றனர்.

கர்தம முனிவரின் துறவு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தேவஹூதியின் வருத்தம்

நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை பகவானைவிடவும் சிறந்தவராகப் பார்த்த தேவஹூதி அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். நீண்ட காலமாக மதச் சடங்குகளைக் கடைப்பிடித்துப் பணிவிடை செய்ததால் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவளைப் பார்த்த கர்தமர் அன்பு மேலிட தடுமாறும் குரலில் பேசலானார்.

மாலை நேரத்தில் திதி கருவுறுதல்

பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.

குமாரர்கள் மற்றும் இதர மக்களின் படைப்பு

ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது தேக அபிமானம், மரண உணர்ச்சி, சுய வஞ்சனை, விரக்தி, பொய்யான உரிமை உணர்வு ஆகியவற்றை படைத்ததன் மூலமாக, உயிர்கள் இந்த பௌதிக உலகில் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்.இவை போன்ற ஐவகை அஞ்ஞானங்களைப் படைத்ததால் பிரம்மா மகிழ்ச்சியடையவில்லை.

Latest news

- Advertisement -spot_img