பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.