AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

227 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா?

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்கே விவாதிக்கின்றனர்.

ஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்

பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.

கண்மூடித்தனமான சரணாகதி நீடிக்காது

கடவுளைப் பற்றிய விஞ்ஞான அறிவிற்கு உணர்ச்சிகள் தேவையில்லை. உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவை உபயோகமற்றவை. கடவுளைப் பற்றிய அறிவு உண்மையானதாக இருக்க வேண்டும், உணர்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை. பக்தியின் மிகவுயர்ந்த நிலையில் உணர்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கடவுளைப் பற்றிய ஆரம்ப விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு உணர்ச்சிகள் தேவையில்லை.

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள் 1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.   நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப்...

கிருஷ்ணரை தரிசிப்பதற்கான பேராசை

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.

Latest