- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

கிருஷ்ணரிடம் பற்றுதலை வளர்த்தல்

உயர் அதிகாரியிடமிருந்து கற்பதே பக்குவமான அறிவாகும். தவறு செய்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுள்ள புலன்கள், ஏமாற்றுதல் என நான்கு வித குறைபாடுகள் மனிதர்களிடம் உள்ளன. எனவே, இறந்த, நிகழ், எதிர்காலம் ஆகிய முக்காலமும் அறிந்த ஒருவரிடமிருந்து நாம் அறிவைப் பெற வேண்டும். கிருஷ்ணர் மற்றும் அவரது பிரதிநிதியிடமிருந்து அறிவைப் பெறுவது மிகச்சிறந்ததாகும். கிருஷ்ணர் பக்குவமானவர், கிருஷ்ணர் கூறிய செய்தியை மாற்றமின்றி கூறும் அவரது பிரதிநிதியின் செய்தியும் பக்குவமானதே. சாதாரண மனிதன் அல்லது உயிர்வாழிகள் கிருஷ்ணரைப் போன்று பக்குவ மானவர்கள் அல்ல. அது சாத்தியமும் இல்லை. ஆனால், கிருஷ்ணரின் உபசேதங்களில் நீக்குதல், இடைச்செருகுதல் ஆகியன ஏதுமின்றி உபதேசங்களை பிறழாது பின்பற்றும்போது ஒருவன் பக்குவமானவனாகிறான்.

வாழ்வில் வெற்றியடைய…

ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச் செயல்களுக்கும் (கர்மத்திற்கும்) உரிய விளைவுகள் உண்டு. ஒருவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தால், அஃது எத்தகையதாக இருந்தாலும், அவனது மனம் கர்மாத்மக, அதாவது, பலன்நோக்குச் செயல்களால் நிறைந்ததாகும். மனம் களங்கமாக இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன்நோக்குச் செயல்களில் ஒருவன் மூழ்கியிருக்கும் வரை, அவன் பௌதிக உடலை ஏற்றாக வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.5)

குறைவில்லா இயற்கை

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

கிருஷ்ண உணர்விற்கு அவசரமா?

நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் சில சமயங்களில், கடவுள் இல்லை”, நானே கடவுள்”, கடவுளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று சிலர் சவால் விடுவதும் உண்டு. இவ்வாறு சவால் விடுவதால் யாரும் காப்பாற்றப்படப் போவதில்லை. கடவுள் இருப்பதை ஒவ்வொரு கணமும் நம்மால் காண முடியும். வாழும்பொழுது கடவுளை ஏற்க மறுத்தால், கொடூரமான மரணத்தின் வடிவில் அவர் நம்முன் தோன்றுவார். நாம் அவரை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண விரும்பாவிடில், வேறோர் உருவத்தில் அவரை நாம் காண வேண்டிவரும். விஸ்வரூபத்தின் மூல காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளுக்குப் பல்வேறு ரூபங்கள் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

மரணத்தை மறவாதீர்

மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.   சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, சமீபத்தில் மாணவன் ஒருவன்...

Latest

- Advertisement -spot_img