- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

தலை வணங்குதல்

தலை வணங்குதல் கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.   விருந்தினர்: கீழ்ப்படிதல் என்பது குறித்து விவரிக்க இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிதல்....

பிணத்திற்குச் செய்யும் அலங்காரம்

உண்மையில், நாம் வாழும் இந்த உடலானது இறந்த உடல் என்பதே உண்மை. ஆரம்பத்திலிருந்தே இந்த உடலானது இறந்த உடலாகும். ஏனெனில், இந்த உடல் ஒரு ஜடப் பொருள். ஜடத்திற்கு என்றுமே உயிர் கிடையாது. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றினால் உருவான இந்த ஸ்தூல சரீரம் உயிரற்ற ஜடமாகும். சிறிய ஆன்மீகப் பொறி என்னும் ஆத்மா இதனுள் இருக்கின்ற காரணத்தினால், அஃது உயிரோட்டத்துடன் இருக்கின்றது. இதையே நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம், தேஹினோ யதா தேஹே, உடலினுள் சிறிய ஆன்மீக பொறி உள்ளது. இதுவே, ஆன்மீக உணர்வின் முதற்படியாகும்.

துறவி என்பவர் யார்?

மனக்கற்பனையிலும் புலனின்பத்திலும் ஆர்வமுடன் இருக்கும் பௌதிகவாதிகள், ஆத்மாவைப் பற்றி அறியாது உடல்சார்ந்த வாழ்வில் ஆர்வமுடன் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான சாதுக்களில் பலரும்கூட மனக்கற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் பக்குவமானவர்கள் இல்லை. உடல்சார்ந்த வாழ்வைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பவர்கள் பௌதிகவாதிகளே. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சமூகம், தத்துவம் முதலியவற்றிக்குத் தலைமை தாங்குபவர்களும் பௌதிகவாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை யோகிகளாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்கள் ஏற்கின்றனர். இத்தகையவர்களால் தவறாக வழிநடத்தப்படும் உலகம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றது.

அனைவருக்கும் வேலை அவசியம்

அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும்? யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்?

பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.

Latest

- Advertisement -spot_img