ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? யாரேனும் ஒருவர் கவரக்கூடியவராக இருந்தால், அவர் முக்கியமானவர், சரியா?
பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். விடியற் காலையிலிருந்து இரவு நெடு நேரம் வரை அவர்கள் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேவலயா பக்தி, அதாவது தூய்மையான பக்தி என்று அழைக்கப்படுகிறது.
சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த சார்லஸ் ஹென்னிஸ் என்பவரிடையே எடுத்துரைக்கும் உரையாடல்.
தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும் நினைத்துக் கொண்டிருந்தனர். இதுவே கிருஷ்ண உணர்வு. அர்ஜுனன் போரிட்டபோது கிருஷ்ணர் அங்கு இருந்தார், பாண்டவர்கள் துரியோதனனுடன் அரசியலில் ஈடுபட்டபோதும் கிருஷ்ணர் அங்கு இருந்தார்.
பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ’யோகம்’ என்ற சொல்லுக்கு இணைப்பது என்று பொருள். ’யோகம்’ என்றால் நாம் நமது உணர்வை இறைவனுடன் இணைக்கின்றோம் என்று பொருள்.