இந்த ஜடவுலகில் ஆண்-பெண் உறவு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. மனித சமுதாயத்தில் மட்டுமின்றி, பூனைகள், நாய்கள், பறவைகள் என எல்லா உயிரினங்களிலும் ஆண்-பெண் ஈர்ப்பு உள்ளது. அஃது ஏன்? அதற்கான பதில், ஜன்மாத்யஸ்ய யத:, என்று வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு பரம்பொருளிடம் இருக்கும் காரணத்தினால், இந்த ஜடவுலகிலும் அஃது உள்ளது. பரம்பொருளிடம் ஈர்ப்பு இல்லாவிடில், இவ்வுலகத்தில் எவ்வாறு அது வெளிப்பட்டிருக்க முடியும்?