- Advertisement -spot_img

TAG

balaram

பகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா?

பலராமரின் நடத்தையில் மேலோட்டமாகத் தெரியக்கூடிய முரண்பாட்டினை ஆராய்வதற்கு முன்பாக, பலராமர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம். பலராமர் ஒரு சாதாரண ஜீவன் அல்லர், விசேஷமான ஜீவனும் அல்லர், ஸ்வர்க லோகத்தில் வாழும் தேவனும் அல்லர்; அவர் எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் ஆதியான முழுமுதற் கடவுளாவார். கிருஷ்ணரின் முதல் விரிவாகிய பலராமர் கிருஷ்ணரிலிருந்து வேறுபடாதவர். அவர் கிருஷ்ணரைப் போலவே ஸச்சிதானந்த திருமேனியுடன் ஆன்மீக உலகில் நித்திய வாசம் புரிபவர். கிருஷ்ணரிடம் உள்ள அனைத்து சக்திகளும் பலராமருக்கும் உண்டு. பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் இரண்டு வேற்றுமை மட்டுமே உள்ளன.

கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்

கிருஷ்ண உணர்வே நமது உண்மையான சொத்து என்பதை முழுமையாக உணர்ந்து, கிருஷ்ணரின் நண்பர்களாக மாறுவோம். கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபு வழங்கிய எளிமையான பக்தி மார்கத்தைப் பின்பற்றுவோம் (ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்போம்). யாரோ ஒரு போலி கதாநாயகனுக்கு ரசிகனாக இருப்பதற்குப் பதிலாக, உண்மையான நாயகரான கிருஷ்ணரின் ரசிகர் மன்றத்தில் நாம் நிரந்தர உறுப்பினராவோம்.

பலராமரின் மகிமைகள்

பலராமர் அன்னை தேவகியின் கருவினுள் ஏழாவது குழந்தையாக தோன்றியபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் அந்தரங்க சக்தியான யோக மாயையிடம், பலராமரை ரோகிணியின் கருவிற்கு மாற்றுமாறு கட்டளையிட்டார். இவ்வாறு ரோகிணியின் கருவிலிருந்து பிறந்த பலராமர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தெய்வீகக் குழந்தையின் அதீத சக்தியைக் கண்ட குல குருவான கர்கமுனி, அவருக்கு பலராமர் என்னும் திருநாமத்தைச் சூட்டினார்.

Latest news

- Advertisement -spot_img