ஜனவரி 13–15, சென்னை: இஸ்கான் சென்னை சார்பில், மதுர மஹோத்ஸவம் என்ற பெயரில், நாம ஸங்கீர்த்தனம் மூன்று நாள்கள் நிகழ்ந்தது. இதில் தவத்திரு லோகநாத ஸ்வாமி, தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி மற்றும் மூத்த பக்தர்கள் பலரும் பங்கேற்றனர், அவர்களின் சிறப்பான கீர்த்தனம் ஆயிரக்கணக்கானோரை மகிழ்வுறச் செய்தது. கலி யுக தர்மமாகிய நாம ஸங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்தத் திருவிழா, நிச்சயமாக எல்லோர் மனதிலும் நாமத்தின் மீதான பற்றுதலை அதிகரித்துள்ளது.