- Advertisement -spot_img

CATEGORY

முழுமுதற் கடவுள்

ஆன்மீக பலத்தின் ஆதிமூலம்

இன்று நித்தியானந்த பிரபுவின் அவதாரத் திருநாள், அவர் சாக்ஷாத் பலதேவர் ஆவார். நரோத்தம தாஸ தாகூர் பாடுகிறார்: வ்ரஜேந்த்ர நந்தன ஜேஇ, ஷசீ ஸூத ஹஇல ஸேஇ, பலராம ஹஇல நிதாய், “முன்பு நந்த மஹாராஜரின் மகனாக இருந்தவர் இப்போது ஸச்சிதேவியின் மகனாகத் தோன்றியுள்ளார்.” சைதன்ய மஹாபிரபுவினுடைய தாயாரின் பெயர் ஸச்சிதேவி. கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும் தோன்றினர்.

ஈடுஇணையற்ற கிருஷ்ணர்

கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர் என்று பொருள் கூறலாம். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது. அதாவது, கட்டுப்படுத்துபவர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது. மேலும், கிருஷ்ணர் ஈடுஇணையற்ற நபர் (பரம புருஷர்), ஈடுஇணையற்ற புகலிடம் (பரந்தாமர்), ஈடுஇணையற்ற பிரம்மன் (பர பிரம்மன்) என்று பல வழிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.

நிதாஇ குண மணி

பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிக்கும்போது எப்போதும் அவருடன் பகவான் பலராமரும் அவதரிப்பது வழக்கம். அதன்படி, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக பக்தரின் வடிவில் அவதரித்தபோது பகவான் பலராமரும் பக்தரின் வடிவில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவாகத் தோன்றினார். கருணையின் அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காட்டிலும் ஸ்ரீ நித்யானந்த பிரபு அதிக கருணை வாய்ந்தவராகத் திகழ்ந்து, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிக்கின்றார். நித்யானந்த பிரபுவின் அவதாரத் திருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரைப் புகழ்ந்து லோசன தாஸ தாகூர் எழுதியுள்ள பல்வேறு பாடல்களிலிருந்து ஒரு பாடலை பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

கலி யுகத்திற்கான மூன்று அவதாரங்கள்

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி, கலி யுகத்திற்கான அவதாரம் கல்கி என்று மட்டுமே மக்கள் அறிவர். ஆயினும், மக்களால் பரவலாக அறியப்படாமல், அதே சமயத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக, கலி யுகத்தில் பகவான் மூன்று அவதாரங்களில் தோன்றியுள்ளார். அந்த மூன்று அவதாரங்களைப் பற்றிக் காண்போம்.

Latest

- Advertisement -spot_img