பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர் குறித்து சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின்...
உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும் எப்போதும் பெரும் சோம்பேறிகளாக உள்ளனர்; சோம்பேறிகளால் எதையும் அறிந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு எல்லா விஷயங்களும் சுருக்கமாகவும் உடனடியாகவும் தேவைப்படுகின்றன.
கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.