ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளை வெளிப்படுத்திய காலத்தில் அவரது உற்ற தோழராகவும் அந்தரங்க காரியதரிசியாகவும் செயல்பட்டவர் ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி ஆவார். ஸ்வரூப தாமோதரர் ஸ்ரீ சைதன்யரின் உள்ளக்கிடக்கையை முற்றிலும் உணர்ந்தவர். மஹாபிரபு எத்தகைய மனோபாவத்தில் உள்ளாரோ அதற்குத் தகுந்தாற்போல அவருக்கு உதவி புரிந்தார். ஸ்வரூபருக்கு உதவியாளராகச் செயல்பட்ட ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி மஹாபிரபுவின் அந்த லீலைகள் அனைத்தையும் நேரில் காண்பதற்கும் முதலில் கேட்பதற்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஸ்வரூபரும் மஹாபிரபுவின் அந்த லீலைகளைக் குறிப்பெடுத்து வைத்தார்.