- Advertisement -spot_img

TAG

karma

தலையெழுத்து காரணமும் தீர்வும்

ஒவ்வொரு மனிதனாலும் (குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலையில்) எழுப்பப்படும் முக்கியமான கேள்வி: என் தலையெழுத்து என்ன? சந்தோஷம் வரும் சமயத்தில் ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெற தான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை.

ஜோதிட அணுகுமுறையில் மாற்றம் தேவையா?

மக்கள் பொதுவாக எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கும் துன்பமயமான குழப்ப சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் ஜோதிடர்களை நாடுவது வழக்கம். எனக்கு நேரம் எப்படி இருக்கிறது” என்று கேட்பவர்களுக்கு தினசரி பலன், வார ராசிபலன், பெயர்ச்சி பலன்கள் என தொடர்ச்சியாக ஜோதிடர்கள் தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் மேலாக கைரேகை, ஜென்ம ஜாதகம், ஓலைச்சுவடிகள், கிளி ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், குறி சொல்பவர்கள் என மக்கள் ஒவ்வொரு திசையிலும் ஜோதிடர்களை அணுகி ஆலோசிப்பதை கண்கூடாக காண்கிறோம்.

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-11.jpg சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள் பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏழை மக்களை தங்களது சுயநலனிற்காக...

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகம் என்றால் “இணைத்தல்” என்று பொருள். ஜடவுலகில் கட்டுண்டு வசிக்கும் ஜீவனை முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைப்பதற்கான வழிமுறையே யோகம் எனப்படும். செய்யும் தொழிலைக் கொண்டு (கர்மத்தைக் கொண்டு) இணைத்தல், “கர்ம யோகம்” என்றும், ஞானத்தைக் கொண்டு இணைத்தல் “ஞான யோகம்” என்றும், எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சியினால் இணைத்தல் “அஷ்டாங்க யோகம்” (அல்லது தியான யோகம்) என்றும், பக்தியைக் கொண்டு இணைத்தல் “பக்தி யோகம்” என்றும் அறியப்படுகின்றன.

பகவத் கீதை உண்மையுருவில் : ஒரு கண்ணோட்டம்

தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான ஆன்மீகவாதிகள் இருந்தாலும், பகவத் கீதையை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அர்ஜுனனைப் போன்று பக்தராக இருத்தல் அவசியம். பகவானுடன் ஒருவர் சாந்தமாக, சேவகராக, நண்பராக, பெற்றோராக, அல்லது காதலராக உறவுகொள்ள முடியும். பகவானுடனான அந்த திவ்யமான உறவு முறையினை பக்திமய சேவையில் பக்குவமடையும்போது நம்மால் உணர முடியும். நமது தற்போதைய நிலையில் பகவானை மட்டுமின்றி அவருடனான நமது நித்திய உறவையும் நாம் மறந்துள்ளோம்; பக்தித் தொண்டில் ஈடுபடுவதால் நாம் நம்முடைய சுயநிலைக்குத் திரும்ப முடியும்.

Latest news

- Advertisement -spot_img