புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் நூலில் பதிவு செய்தார்.