- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

திருநாமத்தை ஏற்போம்!

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.

மிக இரகசியமான அறிவு

ஸ்ரீ பகவான் உவாச. பகவான் எனும் இந்த வார்த்தையை நான் பலமுறை விளக்கியுள்ளேன், இதற்கு உன்னத அதிகாரி” என்று பொருள். வேத இலக்கியங்கள் பகவான் எனும் சொல்லை பிறருக்கும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். இருப்பினும், அதனால் அவர்கள் பகவான் கிருஷ்ணருடன் சமநிலையில் உள்ளனர் என்பதாகாது. சில சமயங்களில் நாரத முனிவரும் பகவான்” என்று அழைக்கப்படுகிறார், சிவபெருமானுக்கும் பகவான்” எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது, விஷ்ணு தத்துவங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரைப் பற்றி கூறும்போது ஸ்ரீமத் பாகவதம், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்று கூறுகிறது.

கடவுள் ஏன் அவதரிக்கிறார்?

நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு அனைவரது மதமும் சரியாக இருக்கும்பட்சத்தில், கிருஷ்ணர் இங்கு தோன்றி அதர்மத்தை அழிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தர்மம் என்பது ஒருவரது விருப்பத்தைச் சார்ந்தது எனில், அதர்மம் என்பதற்கே இடமிருக்காது.

மூவகை யோகங்கள்

மன அனுமானத்தின் மூலமாக கடவுளை அறிந்துகொள்ள இயலாது. நமது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டுள்ளதாக இருப்பதால், நம்மால் இந்த பௌதிக உலகின் கிரக அமைப்புகளைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அனைவரும் நான்குவித குறைபாடுகளைக் கொண்டுள்ளோம்.

தவத்தினால் கடவுளை உணர்தல்

பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.

Latest news

- Advertisement -spot_img