- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

ஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்

பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.

கிருஷ்ணரை தரிசிப்பதற்கான பேராசை

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.

மனிதனாக வாழ்வோம்

கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல. மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு, பல்லாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவனே பக்குவமடைய முயற்சி செய்யலாம் என்று கிருஷ்ணர

அனைவரையும் நேசிப்பது எவ்வாறு?

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.

கிருஷ்ணரிடம் பற்றுதலை வளர்த்தல்

உயர் அதிகாரியிடமிருந்து கற்பதே பக்குவமான அறிவாகும். தவறு செய்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுள்ள புலன்கள், ஏமாற்றுதல் என நான்கு வித குறைபாடுகள் மனிதர்களிடம் உள்ளன. எனவே, இறந்த, நிகழ், எதிர்காலம் ஆகிய முக்காலமும் அறிந்த ஒருவரிடமிருந்து நாம் அறிவைப் பெற வேண்டும். கிருஷ்ணர் மற்றும் அவரது பிரதிநிதியிடமிருந்து அறிவைப் பெறுவது மிகச்சிறந்ததாகும். கிருஷ்ணர் பக்குவமானவர், கிருஷ்ணர் கூறிய செய்தியை மாற்றமின்றி கூறும் அவரது பிரதிநிதியின் செய்தியும் பக்குவமானதே. சாதாரண மனிதன் அல்லது உயிர்வாழிகள் கிருஷ்ணரைப் போன்று பக்குவ மானவர்கள் அல்ல. அது சாத்தியமும் இல்லை. ஆனால், கிருஷ்ணரின் உபசேதங்களில் நீக்குதல், இடைச்செருகுதல் ஆகியன ஏதுமின்றி உபதேசங்களை பிறழாது பின்பற்றும்போது ஒருவன் பக்குவமானவனாகிறான்.

Latest news

- Advertisement -spot_img