மோஸீ: இந்தியாவோடு ஒப்பிடும்போது இங்கு குற்ற நிலை எப்படியுள்ளது, உங்கள் கருத்தென்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: குற்றம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?
மோஸீ: ஒருவர் உரிமையை மற்றவர் பறிக்கும்போது அது குற்றமாகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எங்கள் விளக்கமும் அதுவே. உபநிஷத்தில் ........
ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், "வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்" என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த ஜடவுலகம் ஸத்வ, ரஜோ, தமோ (நற்குணம், தீவிர குணம், அறியாமை குணம்) ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டது. இவை எல்லா இடங்களிலும் செயல்படுகின்றன. இம்மூன்று தன்மைகளும் எல்லா உயிரினங்களிலும் வெவ்வேறு அளவு விகிதங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, சில மரங்கள் நேர்த்தியான பழங்களைத் தருகின்றன, மற்றவை எரிப்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன. மிருகங்களிலும் இந்த மூன்று குணங்கள் காணப்படுகின்றன. பசு நற்குணத்தையும், சிங்கம் தீவிர குணத்தையும், குரங்கு அறியாமை குணத்தையும் சார்ந்தது. டார்வினின் கொள்கைப்படி, டார்வின் தந்தை ஒரு குரங்கு (சிரிக்கின்றார்), எவ்வளவு முட்டாள்தனமான கொள்கையை உருவாக்கியிருக்கிறார்!
இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிக உயர்ந்த உன்னதமான நன்மை பயக்கும் செயல்களை ஊக்குவிப்பதால் இஃது ஒரு மிகச்சிறந்த பக்தி இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக உலகம் முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அறிவிப்பதே எங்களின் ஒரே குறிக்கோள். நாங்கள் கிருஷ்ணராக விரும்பவில்லை, அவரது சிறந்த சேவகராக விரும்புகிறோம். இதுவே எங்களின் கூற்று.
சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம் ஆசைப்பட வேண்டும் என்பதையே அவர் அங்கு குறிப்பிடுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே, "தனம் வேண்டேன், ஜனம் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்" என்று கூறினார். அப்படியெனில், அவர் வேண்டுவது என்ன? "நான் வேண்டுவதெல்லாம் கிருஷ்ண சேவை மட்டுமே" என்கிறாரே தவிர, "எனக்கு இது வேண்டாம், அது வேண்டாம். நான் சூன்யமாகிவிடுகிறேன்," என்று அவர் கூறவில்லை.