இந்த மாதம்: ஸ்ரீமத் பாகவதம், பத்தாவது ஸ்கந்தம் கேள்விகள்
(1) ஏழு நாளில் மரணத்தை சந்திக்க இருந்த பரீக்ஷித் மஹாராஜன் பகவானைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் எவற்றை பொருட்படுத்தவில்லை?
(2) பூமாதேவி எந்த உருவத்தை ஏற்று...
மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.