AUTHOR NAME

Bhakti Vikasa Swami

17 POSTS
0 COMMENTS
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

ரெமுணா

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியத்துவம்

பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே தக்க தகுதிகளைப் பெற்றிருந்தார் என்பதே உண்மை. பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஆன்மீக குருவின் ஆணை, கிருஷ்ணரின் திருநாமம் ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, இந்தியாவிற்கு வெளியே கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஸ்ரீல பிரபுபாதர் மட்டுமே.

தீவிரவாதச் செயல்கள்

தீவிரவாதம் மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அந்த தீவிரவாதத்தை ஒரு நாடே முன்னின்று அரங்கேற்றும்போது, அத்தகு தீவிரவாதம் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் மோசமானது என்று அமெரிக்கா கருதுகிறது. அதன்படி, பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று இந்தியாவும், ஈரான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதைப் பார்க்கிறோம். தீவிரவாதம் என்று சொல்லும்போது, நம் மனதில் வருவது மனிதர்களைக் கொல்வது மட்டுமே. மனிதர்களைக் கொல்வது தீவிரவாதமே, ஆனால் கோடிக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் தினமும் கசாப்புக் கூடங்களில் கொல்லப்படுகின்றனவே, அவற்றிற்கு என்ன பதில்? அதுவும் தீவிரவாதச் செயலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

துவாரகை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார். துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

சித்திரகூடம்

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

Latest